தெணியான் என்ற புனைபெயரால் அறியப்படும் கந்தையா நடேசன் (பிறப்பு: சனவரி 6, 1942) ஈழத்தின் குறிப்பிடத்தக்க முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் பொலிகண்டி என்ற ஊரைச் சேர்ந்தவர்.ஆசிரியராகப் பணியாற்றிய தெணியான் விவேகியில் 'பிணைப்பு' என்ற சிறுகதையுடன் ஆரம்பித்து ஏறக்குறைய 120 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். மேலும் புதினம், குறும் புதினம், கவிதை, வானொலி நாடகங்களும் எழுதியுள்ளார்.
இவ் வாய்மொழி வரலாற்றில் சாதியம், சாதிய எதிர்ப்புப் போராட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.